தெருவில்
சந்தையில்
கோயிலில்
பேருந்தில்
கடற்கரையில்
வயற்பரப்பில்
வெட்ட வெளியில்
கல்யாண வீட்டில்
மயானம் கடக்கையில்
தனித்து இருக்கையில்
'அம்மா' என
யாரும் அழைத்தால்
திடுக்கிட்டு திரும்புகிறாள்
'காணாமற் போனோன்'
தாய்!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.