Wednesday, 25 July 2012

நழுவி விழும் கவிதைகள்

சர்ப்ப நா நுனியென
முனை சிறுத்த
கூர் கத்தி கொண்டு
காயம் செய்து-பின்
கசியும் குருதி நிறுத்த
அழுத்தி அமத்தப்படும்
விரல்களினோடு
நழுவி விழுகின்றன
எனது கவிதைகளும்
சில
பூக்களும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.